Sunday 16 March 2014

ஜாதி, மொழி மற்றும் நாடு


ஜாதி, மொழி மற்றும் நாடு ::

சுய மரியாதை, சுய சிந்தனை, தன்னம்பிகை, தைரியம் இல்லாத பயந்தாங்கொள்ளிகள் ஒளிந்து கொள்ளும் திறமை அற்றவர்களின் கூடாரம் ஜாதி. அமெரிக்கனுக்கு, பிரிட்டிஷ்காரனுக்கு ஏன் பாகிஸ்தானிக்கு கூட அது தேவைப்படவில்லை, நமக்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.
வீரனை விட சூரன் பெரிய வீட்டில் இருந்தால் சாதிச் சண்டை வந்து விடுகிறது. சூரன் தெருவில் வீரன் நடந்தால் சண்டை.

மொழிப்பற்றும், தேசப்பற்றும் இல்லாத காரணத்தினாலேயே இவை. தமிழன் என்று தன் மொழியை நேசிக்கிறானோ,  என்று தன் நாட்டை நேசிக்கிறானோ அன்றுதான் சாதிச் சண்டை ஒழியும்.
நாம் ஒன்றும் மொழிப்பற்றும், தேசப்பற்று,ம் இல்லாதவர்கள் அல்ல. குறளும், அகமும், புறமும் நம் மொழிப்பற்றுக்கு சாட்சி. நாட்டுக்காக தன் உயிரையே  துச்சமாக எண்ணியவர்கள் ( திருப்பூர் குமரன் , தீரன் சின்னமலை, மருது பாண்டியர் …) வாழ்ந்த நாடுதான் இது. மற்றொருமுறை அவற்றை பெற வேண்டும், கடவுள் காப்பாராக !!!

பாரதி சொன்னபடி பெரிய தெய்வம் அருளல் வேண்டும்.


No comments:

Post a Comment