Tuesday 25 February 2014

குல தெய்வங்கள் – நாலுமூலைக்கிணறு சாஸ்தா.



ஆதி மனிதன் குழுக்களாக இருந்த போது ஏற்பட்டது குல தெய்வ வழிபாடு. குல தெய்வம் என்பது பெரும்பாலும் அந்த குழுவின் ஒரு மிக உன்னதமான தலைவன் அல்லது தலைவியின் வழிபாடே. மதுரை வீரனும், கருப்பண்ண சாமியும், உள்ளூர் சாஸ்தாக்களும் கூட குலத்தலைவர்கள் தாம். அதே மாதிரியே பொன்னி , அங்காள, பச்சை, கங்கை , பகவதி அம்மன்கள்.
ஒரே குல தெய்வம் வழிபடும் அனைத்து இன மக்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரே சாதியாக, ஒரே குலமாக இருந்திருக்கிறார்கள்.



இவர் திருச்செந்தூர் அருகில் நாலுமூலைக்கிணறு என்ற ஊரில் உள்ளார். இவரை ஓதுவார், ஆசாரி, செட்டியார், பிள்ளைமார், குருக்கள் என பலரும் குல தெய்வமாக கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு தாய் மக்களாக, ஒரே குலமாக, ஒரே சாதியாக இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment